யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்! உள்ளூர்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்!

  • January 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வரைவினை, ஆசிய அபிவிருத்தி குழுவுடன் இணைந்து,அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்🔹 நூலக சேவைகள் நவீனமயமாக்கல்🔹 தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்பாடு🔹 மின்னூலக (Digital Library) சேவைகள்🔹 வாசகர் மற்றும் சமூக அடிப்படையிலான அறிவுப் பரப்பல் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் புதிய உயர்வுகளை நோக்கி முன்னேறுகிறது. 📖 அறிவின் ஒளி – சமூகத்தின் வலிமை.

யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர உள்ளூர்

யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர

  • January 15, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று(15.01.2026) வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார். இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறஙுகளின் குரல்கள்” உள்ளூர்

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்”

  • January 15, 2026
  • 0 Comments

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்” 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையிலுள்ள தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கல்கள், திட்டமிட்ட ஒடுக்குமுறை மற்றும் அரசால் ஆதரிக்கப்படும் வன்முறைகள் ஆகியலற்றிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, பாகுபாடான சட்டங்கள், அரசியல் விலக்கம், இராணுவமயமாக்கல் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலம் தமிழர்கள் மெதுவாகவும் திட்டமிட்டும் புறக்கணிக்கப்பட்டனர். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்தக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள், […]

உள்ளூர்

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

  • December 9, 2025
  • 0 Comments

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அரசியல்

தமிழ் அரசு, ஜ.த.தே. கூட்டணி இணைந்து செயல்பட பேச்சு!

  • December 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்இ டிசெம்பர் 08 இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜன நாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பில் நேற்றுக் கூடிப் பேசின. இதன்போது, மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிய வருகிறது. இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள அந்தக் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பேச்சு நடைபெற்றது. நேற்றைய சந்திப்பில் இரு தரப்பும் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து […]

உள்ளூர்

இயற்கை இடரினால் 159 பேர் உயிரிழப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

கொழும்புஇ நவ. 30 – நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 […]

உள்ளூர்

சீரற்ற வானிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 5 குடும்பங்கள் பாதிப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், நவ.3. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று இரவு எட்டு மணி வரையிலான நிலவரப்படி அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. 24 தற்காலிக தங்குமிடங்களில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1,956 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்- சண்டிலிப்பாய் […]

  • 1
  • 2