உள்ளூர்

இயற்கை இடரினால் 159 பேர் உயிரிழப்பு!

கொழும்புஇ நவ. 30 – நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் காணாமல் போயுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 18 பேரும், கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர். அந்த மாவட்டங்களில் முறையே 6 மற்றும் 24 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த அனர்த்தங்களால் நாடு முழுவதும் 234, 503 குடும்பங்களைச் சேர்ந்த 833, 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 34, 198 குடும்பங்களைச் சேர்ந்த 122, 822 பேர் 919 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

admin

About Author

Leave a comment

You may also like

உள்ளூர்

கரவெட்டி இளைஞனை காணவில்லையெனகுடும்பத்தினர் முறைப்பாடு

செல்வாபுரம் கரணவாய் தெற்கு கரவெட்டி எனும் முகவரியில் வசிக்கும் சந்திரசேகரம் (சந்திரமோகன்) (NIC-871273766) என்பவரை 09/02/2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர்
உள்ளூர்

மாவீரர் தினம்

  • November 27, 2025
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்